Wednesday, July 17, 2013

பேராசிரியர் நெடுஞ்செழியனுக்கு திருச்சியில் த.க.இ.பே. பாராட்டு விழா!

கர்நாடக் காவல்துறை தொடுத்த பொய் வழக்கை உடைத்து சிறை மீண்ட ‘தமிழ்த்தேசப் புகழொளி, பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கும், சிறைமீட்ட மூத்த வழக்கறிஞர் திரு.சு.க.மணி அவர்களுக்கும் பாராட்டு விழா  , திருச்சியில் 17.07.2013 புதன் கிழமை மாலை 5.00மணி, புத்தூர் நால்ரோடு அருகில் வெல்லாளியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு மக்கள் உரிமைப் பேரவை ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி தலைமை தாங்கினார்.

தமிழ்க்கலை இலக்கியப் பேரவை திருச்சி செயலாளர் தோழர் நா.இராசரகுநாதன் வரவேற்புரையாற்றினார்.

திருச்சி மாவட்டத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு ‘தமிழ்த் தேசச் செம்மல் தோழர் வீ.ச.சோ, உலகத் தமிழர் பேரமைப்பு திரு ம.பொன்னிறைவன், பேராசிரியர் இரா.சக்குபாய், அருள்தந்தை சேவியர் ஆரோக்கியசாமி, திருக்குறள் கல்வி மையம் திருக்குறள் சு.முருகானந்தம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பேராசிரியர் க.நெடுஞ்செழியன், மூத்த வழக்கறிஞர் சு.க.மணி ஆகியோரை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் இரா.நல்லகண்ணு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பாராட்டிச் சிறப்புரையாற்றினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர் சா.செல்வக்குமார் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில், திரளான தமிழ் உணர்வாளர்கள் திரளானோர் பங்கேற்றனர். 














(செய்தி : த.க.இ.பே செய்திப் பிரிவு, படங்கள் : செல்வகுமார்)

No comments:

Post a Comment