Monday, July 8, 2013

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கு பாராட்டு விழா!


பொய் வழக்குகளிலிருந்து சிறை மீண்ட
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கு
த.க.இ.பே. சார்பில் பாராட்டு விழா!

தமிழின விரோத கர்நாடக அரசின் காவல்துறை தொடுத்த பொய் வழக்குகளை உடைத்து சிறை மீண்டிருக்கும், தமிழறிஞரும், தமிழிய ஆய்வாளருமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கு தமிழ்க் கலை இலக்கியப் பேரவை  - மக்கள் உரிமைப் பேரவை அமைப்புகளின் சார்பில் பாராட்டு விழா நடைபெறுகின்றது.

வரும் 17.07.2013 அறிவன்(புதன்) கிழமையன்று மாலை 5 மணியளவில், திருச்சி புத்தூர் நால்ரோடு அருகிலுள்ள வெக்காளியம்மன் திருமண மண்டபத்தில் இப்பாராட்டு விழா நடைபெறுகின்றது. 

நிகழ்வுக்கு, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி அவர்கள் தலைமையேற்கிறார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி செயலாளர் கவிஞர் நா.இராசாரகுநாதன் வரவேற்புரையாற்றுகிறார். திருச்சி மாவட்டத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு அமைப்பாளர் 'தமிழ்த் தேசச் செம்மல்' தோழர் வீ.ந.சோ., உலகத் தமிழர் பேரமைப்பு திரு. ம.பொன்னிறைவன், பேராசிரியர் இரா.சக்குபாய், அருள்தந்தை சேவியர் ஆரோக்கியசாமி, திருக்குறள் கல்வி மையம் திரு. சு.முருகானந்தம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் த.கவித்துவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். 

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களும், பேராசிரியரை சிறை மீட்ட மூத்த வழக்கறிஞர் திரு. சு.க.மணி அவர்களும் பாராட்டு பெறுகின்றனர். 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் இரா.நல்லகண்ணு ஆகியோர் பாராட்டிச் சிறப்புரையாற்றுகின்றனர். 

நிறைவில், தோழர் சா.செல்வக்குமார்(த.தே.பொ.க.) நன்றி கூறுகிறார். 

தொடர்புக்கு: 9443122860, 9842446044


No comments:

Post a Comment