Sunday, February 9, 2014

திருச்சியில் த.க.இ.பே. சார்பில் ஆவணப்படத் திரையிடல் நிகழ்வு!


திருச்சியில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், 'பேசாமொழி' ஆவணப்படத் திரையில் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் திங்களன்று த.க.இ.பே. சார்பில் நடைபெற்று வரும் திங்கள் கூட்டம் வரும் 15.02.2014 காரி (சனி)க்கிழமையன்று மாலை 6 மணியளவில், திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருண் ஹோட்டல் சிற்றங்கில் நடைபெறுகின்றது. 

கூட்டத்திற்கு, இதழாளர் திரு. தி.மா.சரவணன் தலைமையேற்கிறார். பொறியாளர் து.இரவி, தமிழ்த் திரையுலகின் 100 ஆண்டு காலப் போக்குகள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். 

முன்னதாக, இந்தியத் திரையுலகிற்கு முன்னோடியாக தமிழகத்தில், மவுனத் துண்டுப் படங்களை திரையிட்டுக் காட்டிய தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட் அவர்களது வாழ்க்கையையும், தமிழ் மவுனத் திரைப்படங்களில் வரலாற்றையும் எடுத்துரைக்கும் வகையில், 'பாலை' திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் அவர்கள் இயக்கத்தில் வெளியான "பேசாமொழி" ஆவணப்படம் திரையிட்டுக் காட்டப்படுகின்றது. 

தொடர்புக்கு: 9842446044, 9443532268