Saturday, December 9, 2006

மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி!


மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின்
நினைவேந்தல் நிகழ்ச்சி!

09-12-2006

தமிழ்க் கலை இலக்கிய பேரவையின் சார்பில் மூத்த எழுத்தாளரும் மனித நேய பண்பாளருமான வல்லிக்கண்ணன் அவர்களின் மறைவையொட்டி நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை தேவநேய பாவாணர் நூலகத்தில் 9-12-2006 அன்று மாலை நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு த.க.இ.பே. ஒருங்கிணைப்பாளர் தோழர் உதயன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் நெய்வேலி பாலு அவர்கள் தரைமைத் தாங்கினார். முகம் மாமணி, களந்தை பீர் முகம்மது, கவிஞர் சுவர்ணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றினர். இறுதியாக தோழர் கவிபாஸ்கர் நன்றியுரை நிகழ்த்தினார்.