கொள்கை அறிக்கை


இந்திய ஏகாதிபத்தியத்தின் அடிமை விலங்கால் சிறைபடுத்தப்பட்டிருக்கும், தமிழர்களின் தாயகமாக தமிழ்நாட்டை விடுவிக்கும் தமிழ்த்தேசிய இலட்சியத்தை தமிழ் மக்களிடம் கொண்டு செல்லவும், இல்லட்சியத்தின்பால் தமிழ் மக்களை ஈர்க்கவும் செய்கின்ற கலை இலக்கியப் படைப்புகளே, இன்றைய காலகட்டத்தில் மிகமிகத் தேவையான கலைப் படைப்புகளாகும்.

கவிதை, கட்டுரை தொடங்கி குறும்படம், திரைப்படம் வரை விரிவடைய வேண்டிய, தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் படைப்புகளை ஊக்குவிக்கவும், அதை மேலும் செழுமைப்படுத்தவும் உதவுகின்ற, தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் படைப்பாளிகளின் அணிவகுப்பே, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை அமைப்பாகும். 




No comments:

Post a Comment