Friday, October 17, 2014

திருச்சியில் நாளை (18.10.2014) “வேர்கள் மண் பிடிக்கும்” - நூல் வெளியீட்டு விழா!


நாளை(17.10.2014) திருச்சியில்...
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில்
“வேர்கள் மண் பிடிக்கும்” 
கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா!

நாளை (18.10.2014) மாலை, திருச்சியில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் நா. இராசா ரகுநாதன் இயற்றியவேர்கள் மண் பிடிக்கும்” - கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா நடைபெறுகின்றது

நாளை மாலை 5.30 மணியளவில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள இரவி சிற்றரங்கில் (கலைஞர் அறிவாலயம் அருகில்) நடைபெறும் இந்நிகழ்வுக்கு, பாவலர் மூ..கவித்துவன் தலைமையேற்கிறார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் . ஆனந்தன் வரவேற்புரையாற்றகிறார்

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், நூலை வெளியிட்டு, 'படைப்பில் அறம் செய்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். இலக்கியத் திறனாய்வாளர் திரு. வீ..சோமசுந்தரம், திருக்குறள் திரு. சு.முருகானந்தம், புலவர் தமிழாளன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் தோழர் நா.வைகறை ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்

பாவலர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் அவர்கள் நூல் மதிப்புரை வழங்குகிறார். தோழர் பி.இரெ.அரசெழிலன் நூலைப் பெற்றுக் கொள்கிறார். நூல் ஆக்கத்திற்குத் துணை நின்ற தோழர்கள் தி.மா.சரவணன், பாவலர் கவிபாஸ்கர் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்படுகின்றது

நிறைவில், நூலாசிரியர் பாவலர் நா.இராசாரகுநாதன் ஏற்புரை வழங்குகிறார். தோழர் இனியன் நன்றியுரையாற்றுகிறார்

இந்நிகழ்வு, கண்ணோட்டம் இணைய இதழ் (www.kannotam.com) இணையதளத்தில், நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது

இந்நிகழ்வில், திருச்சி வாழ் தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்

தொடர்புக்கு: 9443975784


===============================
செய்தித் தொடர்பகம்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.
===============================

No comments:

Post a Comment