Tuesday, August 27, 2013

தஞ்சையில் த.க.இ.பே. சார்பில், நாளை அறப்போர் ஆவணப்பட வெளியீட்டு விழா!



தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், தஞ்சையில் நாளை (28.08.2013), தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்டத்தை ஆவணப்படுத்தும் “அறப்போர்” ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா நடைபெறுகின்றது. 

தஞ்சை பெசண்ட் அரங்கில், மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இவ்விழாவிற்கு தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தஞ்சை செயலாளர் புலவர் கோ.நாகேந்திரன் தலைமையேற்கிறார். தோழர் அ.வில்லியம் வரவேற்புரையாற்ற, நிகழ்வின் தொடக்கத்தில் ஆவணப்படம் திரையிடப்படுகின்றது. 

மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. பா.பாரதிதாசன் ஆவணப்படத்தை வெளியிட, பொறியாளர் ஜோ.ஜான்கென்னடி, பேராசிரியர் வி.பாரி, திரு. அ.மன்னர்மன்னன், திரு. மா.சீனிவாசன், திரு. க.நலங்கிள்ளி ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர். 

ஆவணப்படத்தின் இயக்குநர் திரு. வெற்றிவேல் சந்திரசேகர், ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளரும் பத்திரிக்கையாளருமான தி்ரு. மு.நியாஸ் அகமது, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் கவிஞர் கவிபாஸ்கர் ஆகியோர் கருத்துரை நிகழ்த்துகின்றனர். நிறைவில், திரு. க.காமராசு நன்றி கூறுகிறார். 

இந்நிகழ்வில், தமிழுணர்வாளர்களும், தஞ்சை பகுதி வாழ் மாணவர்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்! 

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை,
செய்தித் தொடர்பகம். 

Tuesday, August 13, 2013

சென்னையில் “வேட்டி” குறும்பட வெளியீட்டு விழா இரத்து செய்யப்பட்டது!



சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த 
“வேட்டி” குறும்பட வெளியீட்டு விழா இரத்து செய்யப்படுகிறது!

எழுத்தாளர் கி. ராஜநாரயணன் எழுதி, வ.கெளதமன் இயக்கிய ”வேட்டி” குறுப்பட வெளியீட்டு விழா, இன்று(13.8.2013) செவ்வாய் மாலை 5.30 மணியளவில் சென்னை அண்ணாசாலை, புக் பாயிண்ட் அரங்கம் (ஸ்பென்சர் பிளாசா எதிரில்) நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

தவிர்க்க இயலாத காரணங்களுக்காக, இக்குறும்பட வெளியீட்டு விழா இன்று இரத்து செய்யப்படுகின்றது.

இன்னணம்
கவிபாஸ்கர்,
செயலாளர், த.க.இ.பே

Sunday, August 11, 2013

சென்னையில் “வேட்டி” குறும்பட வெளியீட்டு விழா!


சென்னையில் “வேட்டி” குறும்பட வெளியீட்டு விழா!

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்தும், எழுத்தாளர் கி. ராஜநாரயணன் எழுதி, வ.கெளதமன் இயக்கிய ”வேட்டி” குறுப்பட வெளியீட்டு விழா, 13.8.2013 செவ்வாய் மாலை 5.30 மணியளவில் சென்னை அண்ணாசாலை, புக் பாயிண்ட் அரங்கம் (ஸ்பென்சர் பிளாசா எதிரில்) நடக்கயிருக்கிறது.

இவ்விழாவிற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையேற்று உரையாற்றுகிறார். தமிழ்க் இலக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் தோழர் உதயன் வரவேற்புரையாற்றுகிறார்.

வேட்டி குறும்பட குறுந்தகட்டினை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு வைகோ வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். இலயோலா கல்லூரி மாணவர்கள் ஜோ.பிரிட்டோ- செம்பியன் குறுந்தகட்டைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு வாழ்த்துரைக்கிறார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கருத்துரை வழங்குகிறார். வேட்டி குறும்பட இயக்குநர் வ. கெளதமன் ஏற்புரை வழங்குகிறார்.

இலயோலா கல்லூரி மாணவர் திரு வெற்றி நன்றி நவில்கிறார். கவிஞர் கவிபாஸ்கர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார்.

இக்குறும்பட வெளியீட்டு விழாவிற்கு, திரைப்படத்துறையினர், தமிழின உணர்வாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.

இன்னணம்
கவிபாஸ்கர்,
செயலாளர், த.க.இ.பே