“யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் புத்தக திருவிழா ரத்து செய்யப்பட்டது”
பதிப்பாளர்களுக்கு பபாசி கடிதம்!
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை வரவேற்பு!
இலங்கை யாழ்ப்பாணம் நகரில்
தமிழ்ப்புத்தக திருவிழா நடத்த போவதில்லை என்று தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும்
விற்பனையாளர் சங்கம் (பபாசி) பதிப்பாளர் களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில், “மாண்புமிகு தமிழக முதல்வர்கள் ஈழத்தமிழர்களின்
நலன் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். மேலும் ஈழத்தமிழர் நலனில் அக்கறையும்
பற்றும் கொண்ட பலரும் நமது அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தங்களின் கருத்துகளை தெரிவித்து
வருகிறார்கள்.
ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை
கொண்ட நாமும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு புத்தக் காட்சியை நடத்துவதை தவிர்க்கிறோம்
என்றும், அது குறித்த 23.7.2013 ஆலோசனைக் கூட்டத்தையும் தவிர்ப்பதாகவும் அக்கடித்ததில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழ்க் கலை இலக்கியப்பேரவை
சார்பில் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) “யாழ்ப்பாணத்திற்கு புத்தகக்
கண்காட்சி நடத்தச் செல்லக்கூடாது” என்று வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டது. அறிக்கையை
வரவேற்று தமிழின உணர்வாளர்கள் இணையதளங்களில்
கடிதங்கள், கருத்துகள் எழுதினார்கள்.
இந்நிலையில் பபாசி “புத்தகக்
கண்காட்சி நடத்துவதை ரத்து’’ செய்ததை தமிழ்க் கலை இலக்கியப் பேரவை வரவேற்கிறது. பாராட்டுகிறது.
இண்ணனம்,
கவிபாஸ்கர்
செயலாளர், த.க.இ.பே
நாள்: 17.7.2013
இடம்: சென்னை
No comments:
Post a Comment